மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு! - Seithipunal
Seithipunal


ஆம் ஆத்மி கட்சி தலைவர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மே 8 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கலால் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசேரியாவை மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். 

பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கதுறை மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்தி வருகிறது . மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்வதற்காக மணீஷ் கடந்த வாரம் இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 30ஆம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்தி வைத்தது. மேலும் மணி சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்ததால் திகார் சிறையில் இருந்து காணொளி மூலம் அவர் ஆஜர் படுத்தப்பட்டார். 

இதனை தொடர்ந்து டெல்லி நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manish Sisodia Court custody extension 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->