பொள்ளாச்சி சம்பவத்தில் சிக்கினார் கொலையாளி?! கைது செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்!!
A men attested in pollachi pragathi issue
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவ நாயகன் பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருடைய மகள் பிரகதி கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மாணவி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர், பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடியதில் பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டி என்ற இடத்தில் ஒரு இளம்பெண்ணின் பிணம் அரைநிர்வாண கோலத்தில் கிடந்துள்ளது. இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டுள்ளனர்.
அப்போது பிரகதியின் ஊர்காரரான கோமதி என்ற பெண் உடலை பார்த்துவிட்டு அடையாளம் கண்டு போலீசாருக்கு விபரம் தெரிவித்தார். இத்தகவல் தெரிந்ததும் பிரகதியின் பெற்றோர் துக்கம் தாளாமல் கதறினர். பிரகதி வெளியே சென்ற பொழுது அவரை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
மேலும், வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி பிரகதிக்கு திருமண நடத்த தடபுடலாக ஏற்பாடு நடந்து கொண்டிருக்க, இச்சம்பவம் அவரது பெற்றோருக்கு தாங்க முடியாத துன்பத்தை கொடுத்தது.
இக்கொலைக்கு காரணமாக பெண்ணின் உறவினர் ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். பிரகதியின் உறவினர் சதீஷ்குமாருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக போலீசார் கைது செய்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளில் வெளியான தகவலை அடிப்படையாக கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
English Summary
A men attested in pollachi pragathi issue