தூத்துக்குடியில் பரபரப்பு..! மனைவியை அடித்துக்கொன்ற கணவர்..! நடத்தை சந்தேகத்தால் விபரீதம்...!
A husband who beat his wife to death in Thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை கணவர் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மேலசுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் மாரியப்பன் (50). இவரது மனைவி மாரியம்மாள் (45). இவர் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த மாரியப்பன் அடிக்கடி மாரியம்மாளுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு மாரியம்மாள் அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அங்கு சென்று மாரியப்பன் மலைப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மாரியம்மாளிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், கமபால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் மாரியம்மாள் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து மாரியப்பன் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து மாரியம்மாள் மயங்கி கிடந்ததை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாரியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாறியம்மாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஒட்டப்பிடாரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A husband who beat his wife to death in Thoothukudi