15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.! கடைசி நேரத்தில் விரைந்த அதிகாரி.!! - Seithipunal
Seithipunal


 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை அடுத்துள்ள சோழன்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் 10 ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு திருமணம் நடைபெறுவதாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனை அறிந்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி திரு.சிவகுமாரின் தலைமையில் ரம்யா., கிரிஜா மற்றும் மயிலாடுதுறை மகளீர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

திருமண மண்டபத்திற்கு சென்றதும்., இவர்களை கண்ட திருமண வீட்டார்கள் பதறிபோகவே நல்ல வேலையாக அந்த சிறுமிக்கு திருமணம் நடைபெறும் முன்னதாகவே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

பின்னர் திருமண வீட்டார்களிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டபோது மணமகனின் பெயர் சுரேஷ் (30) என்பதும்., சென்னையில் ஓட்டுநராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் இது குறித்து சுரேஷின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் அந்த சிறுமியை மீட்ட காவல் துறையினர்., மயிலாடுதுறையில் உள்ள காப்பகத்தில் சேர்த்து திருமண ஏற்பாடுகள் யார் செய்தனர் என்ற விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A CHILD MARRIAGE IN NAGAPATINAM


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->