2வது திருமண மோகம்.. "ஆண் குழந்தையை கொன்ற" பெற்றோர்கள் அதிரடி கைது.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கரையப்பட்டியைச் சேர்ந்த மோகன் என்பவருக்கும் நம்மூர்ணி பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நதிகள் இருவரும் பிரிந்து வாழும் நிலையில் இருவரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே அறந்தாங்கி அருகே உள்ள வயிறாவலையை சேர்ந்த செண்பகவல்லி என்ற கிருத்திகாவை மோகன் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இருவருக்கும் கடந்த ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த அந்த குழந்தை அவர்கள் வசித்து வரும் வீட்டின் மேல் மாடியில் உள்ள குடிநீர் தொட்டிக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கே.புதுப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோகன் மற்றும் கிருத்திகாவிடம் விசாரணை நடத்தியதில் முதல் திருமண விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இரண்டாவது திருமணம் நடந்ததற்கான சாட்சியாக குழந்தை இருக்கும். 

இதனால் தண்டனைக்கு ஆளாக நேரிடும் எனக் கருதி குழந்தையை கொன்றதாக இருவரும் காவல்துறையினிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் இரண்டாவது திருமணம் மோகத்தால் பிறந்த ஆண் குழந்தையை பெற்றோர்களே கொன்ற சம்பவம் அரிமளம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2nd wedding craze Parents kill male child arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->