காசிமேட்டில் கரை ஒதுங்கிய சிறுவர்களின் உடல்கள் - கதறும் பெற்றோர்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழைய வார்ப்பு பகுதியில் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தருண், சாமுவேல் உள்ளிட்ட சிறுவர்கள் கடந்த 13-ம் தேதி அன்று கடலில் குளிப்பதற்காகச் சென்றனர்.  

அப்போது, அவர்கள் எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். பலரும் அவர்களைக் கடலுக்குள் தேடிய போதும் அவர்கள் மீட்கப்படவில்லை. 

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த ராயபுரம் தீயணைப்புத் துறையினர் சிறுவர்களின் உடல்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை சிறுவன் தருணின் உடல் கரை ஒதுங்கியது.

அடுத்த சிறிது நேரத்திலேயே சாமுவேல் உடலும் கரை ஒதுங்கியது. இதையறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைதந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 boys died drowned sea in kasimedu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->