உலகக்கோப்பையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!
உலகக்கோப்பையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் கடந்த 19-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் இன்று நடைபெற்ற ஜூனியர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் கலந்துகொண்டர்.
இப்போட்டியில் இளவேனில் 249.8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். தகுதிச்சுற்றில் 631.4 புள்ளிகள் எடுத்து அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனை என்ற சாதனையை இளவேனில் வளரிவான் படைத்தார். இந்த பதக்கம் இப்போட்டியில் அவர் வெல்லும் இரண்டாவது தங்கப்பதக்கமாகும்.
முன்னதாக குழு பிரிவிலும் ஷ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோர் உடன் இணைந்து இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். கடந்த வாரம் நடைபெற்ற உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்பிலும் இளவெனில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
English Summary
tamil girl won gold in world cup shooting