சிறந்த ஃபீல்டர் விருதை தட்டி தூக்கிய இந்திய கேப்டன்!  - Seithipunal
Seithipunal


கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. 

இந்த போட்டியில் 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணி 83 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 

ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் சிறப்பாக ஃபீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு விருது கொடுத்து கௌரவிப்பது ஃபீல்டிங் பயிற்சியாளரின் வழக்கமான ஒன்றாகும். 

அதுபோல் நேற்று நடந்த இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டியில் சிறப்பாக ஃபீல்டிங் செய்த இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சிறந்த ஃபீல்டருக்கான விருது வழங்கப்பட்டது. 

இந்த விருதினை பெற்ற ரோகித் சர்மாவை இஷான் கிஷன், ஹுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் கட்டியணைத்துக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian captain Rohit Sharma won best fielder award


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->