இங்கிலாந்து தொடரில் இன்பார்ம் இந்திய வீரர் நீக்கப்படுகிறார்! கங்குலி கைகாட்டியவருக்கு அதிஷ்டம் கிடைக்குமா?!
இங்கிலாந்து தொடரில் இன்பார்ம் இந்திய வீரர் நீக்கப்படுகிறார்! கங்குலி கைகாட்டியவருக்கு அதிஷ்டம் கிடைக்குமா?!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அணியை தேர்வு செய்த போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அணியில் ரஹானே சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். தற்போது கங்குலி கூறியபடி நடக்கும் நிலையே வந்துள்ளது.
இந்த வருட ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதால் அம்படி ராயுடுவிற்கு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியில் இடம் கிடைத்தது. தென் ஆப்பிரிக்க தொடரில் ஓரளவு சிறப்பாக விளையாடினாலும் ராயுடுவால் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் ரஹானேவிற்கு இடம் கிடைக்கவில்லை.
இது குறித்து அணி வீரர்கள் பட்டியல் வெளியான போதே முன்னாள் கேப்டன் கங்குலி விமர்சனம் செய்து இருந்தார். ராயுடுவை காட்டிலும் இங்கிலாந்தில் ரஹானேவால் சிறப்பாக ஆடமுடியும். எனவே ரஹானே நிராகரிக்கப்பட்டிருப்பது கடினமான முடிவு என கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்கு தேர்வான வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிக்க நடத்தப்பட்ட யோ யோ டெஸ்டில் ராயுடு தோல்வியடைந்துள்ளார். அதனால் அவர் இங்கிலாந்து தொடரிலிருந்து விளக்கப்படலாம் என தெரிகிறது.
இதையடுத்து அவருக்கு பதிலாக வேறு வீரர் சேர்க்கப்பட வேண்டும். அந்த வாய்ப்பு ரஹானேவிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இங்கிலாந்தில் இதுவரை சிறப்பாக ஆடிஉள்ள வைத்துள்ள ரஹானே தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
england tour indian main player will miss another one selected player