சிறையா? விடுதலையா? பொன்முடியின் மேல்முறையீடு மார்ச் 11ல் விசாரணை.!! - Seithipunal
Seithipunal


சொத்து மதிப்பு வழக்கு குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் வரும் மார்ச் 11ஆம் தேதி விசாரணையை தொடங்குகிறது. 

கடந்த முறை விசாரணைக்கு வந்த போது மார்ச் 18 ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்ததை அடுத்து அவசர வழக்காக விசாரிக்க கோரி‌ உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி முறையீடு செய்தார். பொன்முடியின் முறையிட்டை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மார்ச் 11ஆம் தேதி விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponmudi appeal case hearing on March11 in sc


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->