இமாச்சலப் பிரதேசத்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்- முதலமைச்சர் ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருந்து வரும் மழைக் காட்சிகள் கவலை அளிக்கின்றன. அங்கு பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்டுள்ள பேரழிவு கவலை அளிக்கிறது. இமாச்சலப் பிரதேச சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்நாடு துணை நிற்கும், தேவையான உதவிகள் செய்துதரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Necessary assistance will be provided to Himachal Pradesh Chief Minister Stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->