மிகவும் திறமை வாய்ந்தவர் ஓபிஎஸ்... ஜே.பி.நட்டா பரப்புரை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நாளையுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரமும் முடிவடைய உள்ளதால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வாகன பேரணி நடத்தி வாக்குகளை சேகரித்தார். 

பிறகு திறந்த வேனில் நின்றபடி பன்னீர்செல்வத்தை ஆதரித்து ஜே.பி. நட்டா பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,      

திறமை வாய்ந்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம். தமிழக மக்களுக்கு குரல் கொடுப்பவர். அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். 

மிகச்சிறந்த தலைருக்கு வாக்கு சேகரிப்பது பெருமையாக உள்ளது. பன்னீர்செல்வத்தை எம்.பி. ஆக்கி டெல்லிக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JP Nadda says Panneerselvam very capable leader


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->