கருகருவென முடி வளர இதோ டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலத்தில் தலை முடி பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்காக மக்கள் பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கருவேப்பிலையை வைத்து ஒரு ஜூஸ் செய்வது குறித்து இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்:-

கறிவேப்பிலை 

நெய்

தண்ணீர்

செய்முறை:-

அரை லிட்டர் தண்ணீரில் கறிவேப்பிலையை இரவு முழுவதும் ஊறவிட்டு அடுத்த நாள் காலையில் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

அந்தத் தண்ணீர் 150 மில்லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விடவேண்டும். பின்னர் இந்தத் தண்ணீரை வடிகட்டி அதில் நெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் வாரம் ஒருமுறை பருகவேண்டும். இப்படி செய்தால் தலையில் முடி கருகருவென நீளமாக வளரும். ஒரு முடி கூட கொட்டாது.

இதற்கு பயன் படுத்தும் கறிவேப்பிலை புதியதாக இருக்க வேண்டும். வெறும் கறிவேப்பிலை தண்ணீரை பருகினால் அது குடலை வறண்டு போகச்செய்யும் அதனால் தான் அதனுடன் நெய் சேர்த்து பருகவேண்டும். இதை குடித்தபின் வேறு டீ அல்லது காபி போன்ற பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips of hair growth


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->