நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட்டை இழக்கும் அதிமுக.! டிடிவி தினகரன் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டியளித்தார். அந்த சமயத்தில் அவர் கூறியதாவது., 

ஏழை எளிய தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது தவறில்லை., கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பயன் கிடைக்கப்போகிறது? என்றும்., விவசாய நிலத்தில் நடைபெறும் அராஜகமான உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில்., அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். 

எந்த சமயத்தில் விவசாயிகளின் தோழர்கள் நாங்கள்.. தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலில் தூர்வாரவாதக்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையில் இருக்கும் பெரும்பாலான நீர் கடலில் வீணாக கலந்து யாருக்கும் உபயோகம் இல்லாமல் போனது.  

ஜெயலலிதா எந்த திட்டங்களை எதிர்த்து இருந்தாரோ., அந்த திட்டங்கள் அனைத்தையும் தற்போதைய தமிழக அரசானது தொடர்ந்து ஆதரித்து வருகிறது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி அதிகளவில் இருக்கும் என்று கனவில் மிதந்து வருகின்றனர். 

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து கொண்டு வருகிறார் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode ttv dinakaran speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->