மதிமுக வேட்பாளராக களமிறங்கும் வாரிசு.!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.!!
Durai vaiko contest in Trichy constituency behalf mdmk
மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட கழகத்திற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை கையெழுத்திட்டனர்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என ஏற்கனவே வைகோ அறிவித்திருந்தார். இந்த நிலையில் மதிமுக வின் ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்சி மன்ற கூட்டத்தில் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் வைகோ ஆலோசனை நடத்தினார். இந்த ஆட்சி மன்ற கூட்டத்தில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டியிட வேண்டும் என ஒருமித்த கருத்து எழுந்தது.
இதனையடுத்து ஒரு மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைக்கோ போட்டியிட ஆட்சி மன்ற குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அடுத்து மதிமுக வேட்பாளராக துரை வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் மார்ச் 22 ஆம் தேதி பெரம்பலூர் மற்றும் திருச்சி வேட்பாளர்களை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிமுகப்படுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Durai vaiko contest in Trichy constituency behalf mdmk