இவர்கள் இருவரும் விற்பனையாளர்கள்.. அப்போ வாங்குபவர்கள்? - மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு.!
mallikarjun kharge says modi sellers
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றை மோடி, அமித் ஷா இருவரும் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் மோடி, அமித்ஷா இருவரும் விற்பனையாளர்கள். அப்படி என்றால் அதானி, அம்பானி ஆகிய இருவரும் வாங்குகின்றனர். இப்படித்தான் நாடு வளர்ச்சி அடையும்.
அவர்கள் இருவரும் நாட்டின் வளர்ச்சிக்காக இல்லை. பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து அதனை பணக்காரர்களிடம் கொடுத்துள்ளார்.
16 லட்சம் கோடி ரூபாய் கோடிஸ்வரர்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏழை மற்றும் விவசாயிகளுக்கு அவர்கள் எதுவுமே செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
English Summary
mallikarjun kharge says modi sellers