அடுத்த ட்விஸ்ட்.. வழக்கை வாபஸ் பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.!!
Aravind Kejriwal withdraw sc case against Ed arrest
அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மாறு அமலாக்கத்துறை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை சமன் அனுப்பியிருந்தது.
இதனை எதிர்த்து டெல்லி உயர் நதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தலாம் என தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் நேற்று இரவு அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
அமலாக்கத்துறை கவிதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவல் தாக்கல் செய்த அவசரமானவை இரவு விசாரிக்க மறுத்த நீதிபதிகள் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தனது மனுவை வாபஸ் பெறுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு தெரிவித்ததை எடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
Aravind Kejriwal withdraw sc case against Ed arrest