கலவரத்தை தூண்டினாரா அண்ணாமலை? வெளியான பரபரப்பு ஆடியோ.. மறுப்பு தெரிவித்த பாஜக..! - Seithipunal
Seithipunal


வீர மரணம் அடைந்த மதுரை ராணுவ வீரருக்கு, அஞ்சலி செலுத்த சென்ற தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் கைது செய்த நிலையில், இந்த செருப்பு வீச்சு சம்பவம் குறித்து, மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசீந்தரனுடன் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில் எத்தனை பேர் இருக்கிறார்கள், அனைவரையும் வரச் சொல்லுங்கள், ரொம்ப மாஸாக செய்ய வேண்டும், வேற மாதிரி பண்ண வேண்டும், இதை எப்படி அரசியல் செய்வது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறுகிறார். இந்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த ஆடியோவை வைத்து அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.

அந்த ஆடியோவில் இருப்பது கிராப்பிக்ஸ் செய்யப்பட்ட குரல் என பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். சமூகவலைதளங்களில் இந்த ஆடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai Audio leaked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->