நாளை நாங்கள் ஆட்சிக்கு வரும் போது வசமாக மாட்டிக்கொள்வீர்கள் - அரசு அதிகாரிகளை எச்சரித்த விஜயபாஸ்கர்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த நிலையில், நேற்றைய அதிமுக மின்கட்டண ஆர்பாட்டத்தில் அரசு அதிகாரிகளை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் திமுக பொறுப்பேற்ற பிறகு கடந்த சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளதை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், புதுக்கோட்டையில் நடந்த ஆர்பாட்டத்தில் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர் "தற்போது ஆட்சியில் உள்ள திமுகவுக்கு ஆதரவாக பலர் செயல்படுகின்றனர். அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் நாளை ஆட்சி மாற்றம் ஏற்படும்போது வசமாக மாட்டிக் கொள்வீர்கள். பிரச்சினை எங்களுக்கு இல்லை, உங்களுக்குதான்" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK vijayabhaskar warning to Govt staffs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->