மோதுகிறது தாமரை-உதயசூரியன்.! நீங்களா?-நாங்களா? பார்த்துவிடுவோம்.!! அறைகூவலில் தமிழிசை.!!
a war start in dmk vs bjp., tamilisai terror speech
பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு நேற்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்திற்கு தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான டாக்டர்.தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டமானது நிறைவு பெற்றவுடன் செய்தியாளர்களுக்கு தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் கூறியதாவது.,
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை தமிழகத்தை அழிக்க நினைப்பவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் முற்றிலும் பாரதிய ஜனதா கட்சியை ஒழித்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.
இதற்கு பின்னர்தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா தனது விஸவரூபத்தை எடுக்கப்போகிறது. நாங்கள் விஸ்வரூபம் எடுத்தவுடன் நீங்களா? நாங்களா? என்று பார்த்துவிடலாம்.
பாரதிய ஜனதாவை மு.க.ஸ்டாலினால் அடக்கவும் முடியாது., முடக்கவும் முடியாது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 19.5 விழுக்காடு அளவிற்கு வாக்குகளை பெற்றிருந்த நிலையில்., இந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியா? இல்லை நாங்களா? என்று பார்த்துவிடலாம்.
"சாடிஸ்ட்" மனப்பாங்கு கொண்ட சோனியா காந்தி., பல இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தவர்., அவரை மேடையில் வைத்து கொண்டு மு.க.ஸ்டாலின் பிரதமரை "சாடிஸ்ட்" என்று கூறினார். மேலும்., திமுகவால் முன்மொழியப்பட்ட பிரதம வேட்பாளர் ராகுல்காந்தியின் திட்டம் தோல்வியை விரைவில் எட்டிப்பிடிப்பார்கள் என்பதால்., "சாடிஸ்ட் ஸ்டாலின்" என்று பெருமையோடு அழைக்கப்படுவார் என்று தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
English Summary
a war start in dmk vs bjp., tamilisai terror speech