இங்கிலிஷ் பேசியதால் போன உசுரு!
இங்கிலிஷ் பேசியதால் போன உசுரு!
தன் நண்பன் ஆங்கிலத்தில் பேசியதால் 54 முறை கத்தியால் குத்திக் கொன்ற கொடூர சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. நேற்று நள்ளிரவு அமிர் அப்துல் எனும் இளைஞர் தான், தன்னுடைய நண்பனை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டதாக போலீசில் சரணடைந்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்த அந்த இளைஞர், தனது நண்பன் முகமது அப்ரோஸ் ஆலிம் ஷேக் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே இருப்பான். நான் படிக்காதவன் அதனால் என்னை கிண்டல் செய்யும்படி அவன் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே இருப்பான்.
இதனால், அவனை கொலை செய்ய முடிவு செய்தேன். கழிவறை சென்ற எனது நண்பனை பின்னால் சென்று, 54 முறை கத்தியால் குத்தி கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். பிறகு, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த முகமது அப்ரோஸ் ஆலிம் ஷேக்கின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
English Summary
you speak english well careful