டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு - பெண் படுகாயம் - Seithipunal
Seithipunal


டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணியளவில், வழக்கறிஞர் உடையில் வந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இதையடுத்து காயமடைந்த பெண் சிகிச்சைக்காக சாகேட்டில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், காயமடைந்த பெண் ராதா(40) என்றும், அவரின் வயிற்றிலும், ஒரு கையிலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதற்கு முன்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு இதற்கு முன், டெல்லியின் ரோகினி நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர்கள் போல் உடையணிந்த இரண்டு ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman injured in Saket court shooting in delhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->