மோடி அரசு இதனை தவறிவிட்டது... விவசாயிகளியிடம் ராகுல் காந்தி பேச்சு! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய ஆட்சியில் உள்ள மோடி அரசு விவசாயிகளின் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாயிகள் வளர்ச்சி அடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் நேற்று பீகாரில் தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக தனது நடை பயணத்தை அராரியா மாவட்டத்தில் தொடங்கியுள்ளார். 

இதற்கு முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவு நாளை ஒட்டி அவரது புகைப்படத்திற்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர். தலையில் துண்டு கட்டியபடி காந்தி பூர்ணியா மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகளுடன் ராகுல் காந்தி பேசினார். 

மேலும் அவர்களின் பிரச்சனைகளை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் ராகுல் காந்தி, விவசாயிகளின் அச்சத்தை போக்க மோடி அரசு தவறிவிட்டது. 

எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் விவசாயிகளின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க முயற்சி செய்வோம் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi speech farmers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->