புதுச்சேரியில் சோகம்.. தூர் வாரும் பணியில் சுவர் இடிந்து ஒருவர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி யூனியன் பிரதேசம் வசந்தம் நகர் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோன்று பல்வேறு பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் தேங்காாமல் இருக்க பழைய கால்வாய்கள் அகற்றப்பட்டு புதிய கான்கிரீட் கால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வசந்தன் நகர் மூன்றாவது வீதியில் கால்வாய் தூர்வாரும் பணி மற்றும் பலப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.

இன்று காலை வழக்கம் போல வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வசந்தன் நகர் பகுதியில் 7 அடி உயரம் கொண்ட மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வாய்க்கால் தூர்வாரம் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 6 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த 6 பேரில் இருவரின் உடல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தூர் வாரிய மண்ணை மதில் சுவர் ஒட்டிய பகுதியில் கொட்டும் போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் இடிபாட்டில் சிக்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று வாய்க்கால் தூர்வாரம்பூது புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் முழுமையாக விழுந்து நொறுங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One person died in Puducherry drainage work


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->