கேரளா : ஆற்றிலிருந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் சடலமாக மீட்பு.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் ஆற்றில் இருந்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் புனலூர் பகுதியில் உள்ள கல்லடை ஆற்றுப்பகுதி நோக்கி ஒரு பெண், இரண்டு குழந்தைகளுடன் நேற்று மதியம் 3 மணியளவில் சென்றுள்ளார். இதையடுத்து அந்தப் பெண், நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில், பெண் மற்றும் இரண்டு குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மூன்று பேரும் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் கமுகும்சேரியைச் சேர்ந்த ரம்யா ராஜ்(30) மற்றும் அவரது மகள் சரயு (5), மகன் சௌரவ் (3) என்பதும், இந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother two children found dead in river in kerala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->