அரைகுறை ஆடை அணிந்த மனைவி - ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரிசிகெரே அருகே ராம்புரா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜீவன் - ஜோதி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 
இந்த நிலையில் ஜோதி, உடல் பாகங்கள் தெரியும்படி அரைகுறை உடைகளை அணிந்துள்ளார். இது ஜீவனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. 

இதனால், ஜீவன் மனைவி ஜோதியிடம் அரைகுறை ஆடையை அணியக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், ஜோதி அதனை கேட்காமல் தொடர்ந்து அணிந்ததால், தம்பதியினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதில் ஆத்திரமடைந்த ஜீவன், ஜோதியை அங்குள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்று அவரை சரமாரியாக தாக்கி, தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இதனால், ஜோதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஜீவன் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
 
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக  நடத்திய விசாரணையில், ஜோதியை கொலை செய்தது அவரது கணவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man kill wife for wear modern dress in banglore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->