#வீடியோ : பேரணியில் முத்தம் கொடுத்த எம்.எல்.ஏ மற்றும் செய்தி தொடர்பாளர்.? தீயாக பரவிய வீடியோவால் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநில அரசியலில்  சமீபத்திய வீடியோ ஒன்று வெளியாகி பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது. தற்போது இந்த வீடியோ தொடர்பாக  ஐந்து பேரை மகராஷ்டிரா மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவசேனா கட்சியின் பேரணியின் போது அந்தக் கட்சியின் எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயும் சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷீத்தல் மாத்ரேவும் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ  சமூக வலைதளங்களிலும் செய்தி தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரகாஷ் மற்றும் ஷீத்தலாகிய இருவருமே இந்த செய்திகளை தொடர்ந்து மறுத்து  வந்தனர். அவை சித்தரிக்கப்பட்ட காட்சிகள் எனவும்  தங்களுக்கு வேண்டாத யாரோ இது போன்று மார்பிங் செய்த காட்சிகளை வெளியிட்டு இருக்கின்றனர் எனவும்  குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் சர்ச்சை தொடர்பாக மகராஷ்டிரா மாநில காவல்துறை  வீடியோவை சித்தரித்ததாக கூறி ஐந்து நபர்களை கைது செய்து இருக்கிறது. கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களில் ஒருவர் ஆதித்ய தாக்கரேக்கு நெருக்கமான நபர் என மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஷம்புராஜே கூறியிருப்பது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharastra mla and spoke person kissing contrversy five peope arrested for video morphing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->