ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்த கர்நாடக உயர் நீதிமன்றம்.!
Karnataka court fined 50 lakhs to Twitter
ஒரு சில ட்விட்கள் மற்றும் ட்விட்டர் கணக்குகளை முடக்க சொன்ன மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ட்விட்டர் நிர்வாகம் கடந்த ஆண்டு கர்நாடகா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.
கடந்த ஆண்டு தொடரப்பட்ட இந்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றாத ட்விட்டர் நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் அபரதாமும் விதித்துள்ளது.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவுகளை தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும் கர்நாடகா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அபராத தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் தவறினால் நாள் ஒன்றுக்கு 5000 ரூபாய் அபராத தொகையில் கூடும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English Summary
Karnataka court fined 50 lakhs to Twitter