தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி மும்பரம்.! அதிரடியாக விரைந்த அதிவிரைவு இரயில்., நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் பெரும்பாலனோர் இணையதள விளையாட்டுகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். இந்த விளையாட்டுகள் அனைத்தும் பெரியவர் சிறியவர் வேறுபாடின்றி விளையாடிக்கொண்டு., அதற்கு அடிமையாகியும் வருகின்றனர். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் ஹிங்கோலி பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று இரயில் தண்டவாளத்தில் அமர்ந்தவாறே நாகேஷ் கோர் (வயது 24)., அவரது நண்பர் அன்னபூர்ணே (வயது 22) ஆகியோர் பப்ஜி விளையாட்டை விழாவன்று கொண்டு இருந்தனர். 

அந்த சமயத்தில்., இவர்கள் அமர்ந்திருந்த தண்டவாளத்தில் ஹைதராபாதில் இருந்து அஜ்மீர் செல்லும் அதிவிரைவு இரயிலானது வந்து கொண்டு இருந்துள்ளது. இதனை கவனிக்காமல் விளையாட்டை மிக தீவிரமாக கையாண்டு வந்துள்ளனர். 

இதனால் பரிதாபக இருவரும் இரயில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து இரயிலின் ஓட்டுநர் மற்றும் இதனை கண்ட மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவர்களை பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

அந்த விசாரணையில்., இவர்களின் அலைபேசியை சோதனை செய்கையில் பப்ஜி விளையாட்டை இரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மெய் மறந்து விளையாடியது தெரியவந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in maharastra two youngsters died when playing PUBG game


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->