குடும்ப தகராறு... நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்..! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

உத்திரபிரதேசம் ரேபரேலி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று குடும்பத் தகராறு வழக்கு ஒன்று நடந்தது. இந்த வழக்கில் துக்காராம் என்பவர் ஆஜரானார். இதையடுத்து கோர்ட் வளாகத்திலேயே துக்காராம் மற்றும் அவரது மனைவி உமாதேவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த துக்காராம் கத்தியால் மனைவி உமாதேதியை குத்தியுள்ளார்.

இதைப்பார்த்த போலீசார் உடனடியாக துக்காராமை கைது செய்தனர். மேலும் காயமடைந்த உமாதேவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband stabbed his wife in the court premises in uttar pradesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->