ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி கிடையாது: மணிப்பூர் அரசு திட்டவட்டம்!
congress MP Rahul Gandhi denied permission yatra
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற 14ஆம் தேதி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரையை தொடங்க திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் இதுவரை ராகுல் காந்தி யாத்திரைக்கு மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் அனுமதி மறுத்ததாக மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், அதிக அளவில் மக்கள் கூடும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர்,
'மணிப்பூரின் வேறு பகுதிகளில் ராகுல் காந்தி யாத்திரை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது தகவல் வெளியாகி உள்ளது. யாத்திரை நடைபெறும் இடம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
English Summary
congress MP Rahul Gandhi denied permission yatra