இன்ஸ்டாவில் முதல் மனைவியின் ரீல்ஸை பார்த்த கணவர்.. அந்தரங்க உறுப்பை அறுத்து போட்ட 2-வது மனைவி.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தின் என்டிஆர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் கணவரின் பிறப்புறுப்பை விளையாட அறுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

முப்பல்லா எனும் கிராமத்தில் வசித்து வரும் கோட்டா ஆனந்த் பாபு என்ற நபர் திருமணம் ஆகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளார். அதன் பின் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மறுமணம் செய்தார். தனது இரண்டாவது மனைவி வரம்மாவுடன் பாபு வசித்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது செல்போனில் முதல் மனைவியின் ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்துள்ளார். 

இதை கவனித்த இரண்டாவது மனைவி அவரிடம் சண்டை போட்டுள்ளார் இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மிகுந்த ஆத்திரத்தில் இருந்த வரம்மா கணவர் பாபுவின் அந்தரங்க உறுப்பை பிளேடால் கருத்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக விஜயவாடா மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. கணவர் மனைவிக்கு இடையில் ஏற்படும் கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரது மர்ம உறுப்பை மனைவி பிளேடால் அறுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anthra 2nd wife cutting husband private part who watches reels on Instagram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->