பாஜகவின் அடுத்த இலக்கு : அமித் ஷா அதிரடி .!!
பாஜகவின் அடுத்த இலக்கு : அமித் ஷா அதிரடி .!!
பாஜக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.அதன் பின் பல மாநிலங்களில் பாஜகவின் வெற்றி ஏறுமுகமாகவே இருந்தது.அதற்கு முழு முக்கிய காரணம் அமித் ஷா,அவரின் தேர்தல் அணுகுமுறையும் தேர்தல் வியூகமும் பல வெற்றிகளை தேடி தந்துள்ளது.இதே வேகத்தில் அமித் ஷா அடுத்து நடைபெறவுள்ள 2019 நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார்.நாட்டின் எல்லா இடங்களுக்கு பயணம் செய்து காட்சியை பலபடுத்தி வருகிறார்.
இந்நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் பா.ஜ.க. பூத் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது ,அதில் அவர் பேசியதாவது 2019 தேர்தலுக்காக தான் ஒரு இலக்கு வைத்துள்ளதாகவும் , அதற்கு ஏற்ப அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கூறினார். அதன்படி வடகிழக்கு மாகாணங்களில் மொத்தம் 25 தொகுதிகளில் 21 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் ,சென்ற தேர்தலில் நம் வெறும் 8 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளோம்.
அசாம் மாநிலத்தை பொறுத்த வரை வாக்காளர் பட்டியலில் உள்ள ஒரு ஒரு பக்கத்திற்கும் ஒரு பொறுப்பாளர் என்ற அளவில் நிர்வாகிகளை அமைத்து செயல் பட வேண்டும் என அமித் ஷா பேசினார்.
English Summary
amithsha's next plan for BJP