கணவன் மனைவி தகராறு.! குழந்தைக்கு நேர்ந்த சோகம்.!! வெளியான தீர்ப்பு.!!
கணவன் மனைவி தகராறு.! குழந்தைக்கு நேர்ந்த சோகம்.!! வெளியான தீர்ப்பு.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம் விரார் கிழக்கு பகுதியில் உள்ள மன்வெல்பாடா பகுதியை சார்ந்தவர் துஷார் (38)., இவரது மனைவியின் பெயர் சவுஜானி. இவர்கள் இருவருக்கும் ஒரு வயதுடைய ஹர்சிதா என்ற மகள் உள்ளார்.
துஷாருக்கு மருத்துப்பழக்கம் இருந்ததன் காரணமாக வேலைக்கு சென்று வரும் பணத்தை வீட்டிற்கு தராமல்., மது அருந்துவதற்காக செலவழித்து வந்துள்ளார். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அந்த வகையில்., அதிகமாக மனவிரக்தி அடைந்த சவுஜானி சென்ற 2015 ம் வருடம் செப். மாதத்தில் அவரின் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். சிறிது நாட்களில் மனம் திருந்தியதாக கூறி மீண்டும் இல்லத்திற்கு வர சொல்லி துஷார் முறையிட்டுள்ளார்.
மீண்டும் அவருடன் குடும்பம் நடத்த செல்லமாட்டேன் என்று கூறிய சவுஜானி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த துஷார் குழந்தையின் கால்களை பிடித்து தலையில் அடிபடும்படி தரையில்., பலமாக அடித்துள்ளார்.
குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்., சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவ குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு., விசாரணை மேற்கொண்டு துஷாரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துஷாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும்., ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.
English Summary
A ONE YEAR CHILD KILLED BY HER FATHER WHEN PROBLEM WITH HIS WIFE