ஆட்டோ ரிக்ஷா மீது வாகனம் மோதிய விபத்தில் 8 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் வேகமாக வந்த வாகனம் ஒன்று ஆட்டோ ரிக்‌ஷா மீது மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். புனே மாவட்டத்தில்  உள்ள கல்யாண்-அகமத் நகர் சாலையில் ஒட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  நேற்று இரவு  சுமார் 11.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அகமது நகரில் இருந்து தானே மாவட்டத்தின் கல்யாண் நோக்கிச் சென்ற பிக்-அப் வாகனம், பிம்பால்கான் ஜோகாவில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே எதிர் திசையில் இருந்து வந்த ஆட்டோ ரிக்‌ஷா மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஒட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 people died in an auto-rickshaw accident in maharastra


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->