ஆட்டோ ரிக்ஷா மீது வாகனம் மோதிய விபத்தில் 8 பேர் பலி.!!
8 people died in an auto-rickshaw accident in maharastra
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் வேகமாக வந்த வாகனம் ஒன்று ஆட்டோ ரிக்ஷா மீது மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். புனே மாவட்டத்தில் உள்ள கல்யாண்-அகமத் நகர் சாலையில் ஒட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அகமது நகரில் இருந்து தானே மாவட்டத்தின் கல்யாண் நோக்கிச் சென்ற பிக்-அப் வாகனம், பிம்பால்கான் ஜோகாவில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே எதிர் திசையில் இருந்து வந்த ஆட்டோ ரிக்ஷா மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஒட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
8 people died in an auto-rickshaw accident in maharastra