பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலி, 13 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரியாசி மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் நிலைமை மோசமாக உள்ளதாக தெரியவருகிறது. ரியாசி மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.
சம்பவ இடத்தில் மீட்பு படையினர் போராடி 13 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உள்ளூர் மக்களும் விபத்து நடந்த உடனேயே மீட்பு பணி மேற்கொண்டனர். காஷ்மீர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 15 பேர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed 13 injured in a car overturn accident in kashmir


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->