"மூளைச்சாவு அடைந்த நபர் ,உடல் உறுப்பு தானம் செய்த உறவினர்கள்! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் மது மண்டபம் என்ற ஊரைச் சேர்ந்தவர் பிரபாகர். இவர் அருகில் இருக்கும் லாரி பழுதுபார்க்கும் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார்.

நான்கு நாட்களுக்கு முன்பாக பிரபாகர் வேலை செய்யும் பகுதியில் இருந்த மாங்காய் மரத்தில் ஏறி மாங்காய் பறிக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது கால் தவறி கீழே விழுந்த பிரபாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. அருகில் இருந்த அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வந்த பிரபாகர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9:30 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.

மூளை சாவு அடைந்த பிரபாகரனின் உடலை அவரது மனைவி மட்டும் உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து அவரது இரண்டு சிறுநீரகம் கண்கள் தோல் ஆகியவை தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Relatives Donated Body Organs Of The Deceased


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->