எல்லாத்துக்கும் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை : சீறிய பிரபல சீரியல் நடிகை!
எல்லாத்துக்கும் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை : சீறிய பிரபல சீரியல் நடிகை!
நடிகை நந்தினி பிரபல தனியார் தொலைகாட்சி சீரியல்களில் அறிமுகமாகி பலரையும் தனது காமெடியின் மூலம் சிரிக்க வைத்து வந்தார். ஆனால் நிஜ வாழ்க்கையிலோ அவருக்கு நடைபெற்ற சோகம் பற்றி நாம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
இந்நிலையில் இதுகுறித்து நந்தினி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னுடைய கணவர் இறந்தவுடன் நான் மீண்டும் நடிக்க வந்ததால் பலர் என்னை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
ஆனால் நானும் ஒரு பெண் தான், எனக்கும் அனைத்து உணர்ச்சிகளும் இருக்கிறது. தற்போது நான் என்னுடைய குடும்பத்திற்காக இருந்தே ஆக வேண்டும்.
இவ்வாறு விமர்சனம் செய்பவர்களால் என்னை புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே புரிய வைக்க வேண்டும் என்று எனக்கு எந்த ஒரு அவசியமும் கிடையாது. நான் நானாக எப்போதும் இருப்பேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary
serial actress angry about this