இனிமே தான் கொரோனாவோட உண்மை முகம் தெரியும்.! WHO விடுத்த பகிரங்க எச்சரிக்கை.!
who director warning to all countries
இதற்குமேல் தான் கொரோனா வைரசின் உண்மை முகம் தெரியும். இன்னமும் மோசமான நிலைக்கு உலகம் வரப்போகிறது. கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெடிராஸ், "கடந்த ஆறு மாதங்களாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கின்றது. ஆறு மாதங்களுக்கு முன்பு வரை ஒரு வைரஸால் உலகம் இப்படி ஒரு நிலைக்கு ஆளாகும் என்று நாம் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம். அந்த அளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வேகம் எடுத்துள்ளது.
நீண்ட போராட்டத்திற்கு அனைத்து நாடுகளும் தயாராக வேண்டும். அடுத்து வரும் மாதங்களில் வைரஸ் உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். இந்த தொற்றானது இப்போதைக்கு முடியப் போவதில்லை என்பது கசப்பான உண்மை. இதற்கு மேல் தான் அதன் முகமே தெரியும்.இன்னும் மோசமான நிலைக்கு நம்மை ஆளாகும். இது அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் இருக்கின்றது. கரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதை கண்டறிய சீனாவுக்கு அடுத்த வாரத்தில் ஒரு குழுவை அனுப்ப இருக்கின்றோம்."என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவோடு வாழ பழகுவதை தவிர வேறு வழி இல்லை என்று ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை தெரிவித்த நிலையில் உலக சுகாதார அமைப்பும் அதையே தெரிவித்துள்ளது.
English Summary
who director warning to all countries