சட்டவிரோத குடியேற்றம்: 'போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு மிருகங்களுக்கு எதிராக கலக தடுப்பு சட்டத்தை பயன்படுத்துவேன்': அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான அதிரடியான நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுத்துவருகிறார். இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் தொடங்கிய போராட்டங்கள், பல நகரங்களுக்கும் விரிவடைந்துள்ளது. இந்நிலையில், கலகத் தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தி, ராணுவத்தை அனுப்புவேன் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில், சட்டவிரோதமாக தங்கியுள்ளோர் குறித்து, குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகள் சென்றனர். அங்கு, மற்ற நாடுகளில் இருந்து வந்து, பல தலைமுறையாக வசிக்கும் வெளிநாட்டவர்கள் அதிகம் உள்ளதோடு, அவர்களுடன் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களும் உள்ளனர்.

இந்நிலையில்,  பல தலைமுறையாக வசிக்கும் வெளிநாட்டவர்கள் தாங்கள் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்தில், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்ததால், போராட்டம் தீவிரமாகி தற்போது, வன்முறையாக மாறியுள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுக்க 4,000 அதிரடிப் படை போலீசை முதலில் டிரம்ப் அனுப்பிய நிலையில், தொடர்ந்து, ராணுவத்தின் ஒரு பிரிவான, மரைன் படை வீரர்கள் 700 பேர் அனுப்பப்பட்டனர். இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதால், போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்த விவகாரம் அரசியல் ரீதியிலும் பிரச்னையை தீவிரமாக்கியுள்ளது. குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்பின் நடவடிக்கைக்கு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா மாகாண ஆளுநர் காவின் நியூசம், லாஸ் ஏஞ்சலஸ் மேயர் காரன் பாஸ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டு அதிபர் டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது: 'வெளிநாட்டு எதிரிகளான, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த மிருகங்கள், நம் நாட்டுக்கு எதிரானவர்கள். வெளிநாட்டு எதிரிகள், அமெரிக்காவுக்குள் படையெடுத்து வெற்றி பெற அனுமதிக்க மாட்டேன். அதுதான் தற்போது நடந்து வருகிறது.

அரசின் நடவடிக்கையை எதிர்த்து நடக்கும் போராட்டம் கலகமாக மாறினால், 1807-ஆம் ஆண்டு கலகத் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த தயங்க மாட்டேன். இந்த சட்டத்தின்படி, நாட்டின் எந்தப் பகுதியிலும் நாட்டுக்கு எதிராக கலகம் நடந்தால், ராணுவத்தை அனுப்ப அதிபருக்கு அதிகாரம் உள்ளது.' என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனிடையே, ஏஞ்சலஸ் நகரில் தொடங்கிய போராட்டம், நாட்டின் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. குறிப்பாக சியாட்டில், ஆஸ்டின், சிகாகோ, வாஷிங்டனிலும், நேற்று போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, நேற்று முன்தினம் 197 பேர் கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.

போராட்டங்கள் ஒரு பக்கம் நடைபெறும் நிலையில், இதனை பயன்படுத்தி சிலர், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள கடைகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை சூறையாடியுள்ளனர். அத்துடன், அங்குள்ள 'ஆப்பிள்' நிறுவனத்தின் விற்பனை மையத்துக்குள் நுழைந்து, மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை அள்ளிச் சென்றுள்ளனர்.

மேலும்,  நகரில், 53 வணிக வளாகங்களில் பொருட்கள் சூறையாடப்பட்டதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரில், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாக மேயர் காரன் பாஸ் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US President Trump Threatens to Use Riot Act Against Protesters


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->