ஆப்கான் பெண்களின் உயர்கல்வி தடையை நீக்க வேண்டும் - ஐநா தூதர் வலியுறுத்தல் - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை அமைத்தபின், பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது. இதில் பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்க தடை, ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, விமானத்தில் ஆண்கள் துணையின்றி செல்ல தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

மேலும் முறையாக எந்தவித காரணமும் தெரிவிக்கப்படாமல் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தடை விதிப்பதாக தாலிபன் அரசு அறிவித்திருந்தது.

இதற்கு சவுதி அரேபியா, கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன், ஐநா உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஐ.நா. உயர்மட்ட தூதர் மார்கஸ் போட்செல், தாலிபான் அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் நிதா முகமது நதீமை சந்தித்து பேசினார்.

அப்பொழுது பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என ஐநா தூதர் வலியுறுத்தினார். மேலும் பெண்களுக்கு எதிராக இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் உயர்கல்விதடை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து தாலிபான் அமைச்சர் நதீம் தெரிவித்த இந்த தகவலும் வெளியாகவில்லை.

இதையடுத்து ஐநா தூதர் மார்கஸ், தலிபான் அரசின் பொருளாதாரத் துறை அமைச்சர் காரி தின் முகமது ஹனிப், துணைப் பிரதமர் அப்துல் சலாம் ஹனபி, உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் ஆகியோரை சந்தித்து பெண்களுக்கு எதிரான அடக்குமுறை குறித்து விவாதித்தார்.

மேலும் ஜனவரி 13ஆம் தேதி நடக்கவிருக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பற்றி விவாதிக்கபட உள்ள நிலையில், இந்த கலந்துரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN envoy urges to lift ban on women education in afganistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->