பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மூன்றாம் உலகப் போர் தவிர்க்க முடியாததாகிவிடும்! செலன்ஸ்கி எச்சரிக்கை.!
Ukraine president says that third world war by Russia
பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா உடன்படாவிட்டால் மூன்றாம் உலகப்போர் தவிர்க்க முடியாததாகிவிடும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 26 வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போரினால் மரியுபோல் நகரம் முழுவதுமாக சேதம் அடைந்துகள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அளித்த பேட்டியில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் என்பது போர் அல்ல, பயங்கரவாதம் என்றும், ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பயங்கவரவாதத்தை நிறுத்த உக்ரைன் தயாராக இருபதாகவும் தெரிவித்தார்.
மேலும் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால், இது மூன்றாம் உலக போருக்கு வழி வகுக்கும் என்றும் செலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Ukraine president says that third world war by Russia