உக்ரைன் படைகள் ரஷ்ய வீரர்கள் பயன்படுத்தக்கூடிய 2 பாலங்களின் மீது ஏவுகணை தாக்குதல் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடையும் போரில் ரஷ்யாவின் மும்முனை தாக்குதலால் உக்ரைனின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான நகரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள மெலிட்டோபோல் நகரை கைப்பற்றியதுடன் மற்ற நகரங்களை கைப்பற்றுவதற்கு ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் தெற்கு பகுதியை அடைய நிப்ரோ ஆற்றை கடக்க உதவும் அன்டோனிவ் மற்றும் ககோவ் பாலங்களின் மீது உக்ரைன் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன.

அமெரிக்கா வழங்கிய ஹம்மர் ஏவுகணை மூலம் பாலத்தின் மீதும், ரஷ்யா ராணுவ அமைப்புகளின் மீதும் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டதுடன், டி 62 டேங்க் மற்றும் 5 ராணுவ கவச வாகனங்கள் அழிக்கப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine forces destroyed two bridges in southern ukraine


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->