பாகிஸ்தானில் பயங்கரம் || நேருக்கு நேர் மோதிய பேருந்து - வேன் ; 21 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் பயங்கரம் || நேருக்கு நேர் மோதிய பேருந்து - வேன் ; 21 பேர் பலி.!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி பகுதியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி நேற்று அதிகாலை, 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென எதிரே எரிபொருள் ஏற்றி வந்த வேனின் மீது மோதி, பேருந்தும் வேனும் தீப்பற்றி எரிந்தன.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் ஒரு சிலரே கீழே இறங்க முடிந்த நிலையில், 21 பேர் கீழே இறங்க முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தனர். 

மேலும், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

அதன் பின்னர்,போலீஸார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும், பேருந்து வேகமாக இயக்கப்பட்டதா? அல்லது ஓட்டுனர் தூங்கி விட்டாரா? என்று பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty one peoples died for accident in pakisthan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->