இன்று அன்னையர் தினம்.. சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழும் அம்மாக்களுக்கு வாழ்த்துக்களை பல்வேறு விதமாக தெரிவித்து வருகின்றனர்.

உலகம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நம்மை பெற்றெடுத்த அன்னையை அன்போடு இறுதிவரை காப்போம் என்ற உறுதி மொழியை எடுத்து அவர்களுக்கு மரியாதை அளிப்போம்.

மனிதகுலம் தோன்றுவதற்கும், சமூக வாழ்வு தொடங்கும் போதும் அன்னை வழி சமூகத்தின் வழியாகத்தான் தொடங்கி நடைபெற்று வருகிறது. தாய் தனது குழந்தைகளுக்காக பசி, தூக்கம், விரும்பும் உணவு, தன் சுகம் என அனைத்தையும் தியாகம் செய்து தனது குழந்தைகளை வளர்க்க்கிறாள் அதனால் அனைத்தையும் துறந்த தாயை இன்று நாம் போற்றி புகழ்வோம்.

இந்த நிலையில் கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினங்களை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அன்னையர் தினத்தை கொண்டாடும் விதமாக சிறப்பு டூடுல் வெளியிட்டது கூகுள் நிறுவனம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today mother's day Google release special doodle


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->