இங்கிலாந்து அரசர் மீது மீண்டும் முட்டை வீச்சு.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து அரசர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீசியது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்துக்குப் பிறகு அரசராக 3-ம் சார்லஸ் பதவியேற்றார். இந்நிலையில் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வரும் அவர், நேற்று வடக்கு லண்டனில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லூட்டன் நகரத்துக்கு சென்றார்.

பின்பு நகர்மன்ற கட்டிடத்துக்கு வெளியே பொதுமக்களை அரசர் சார்லஸ் சந்தித்தபோது, அவரை நோக்கி ஒரு முட்டை வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அரசர் சார்லசை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். 

இதையடுத்து மன்னர் மீது முட்டை வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடந்த மாதம் வடக்கு இங்கிலாந்து சென்ற மன்னர் சார்லஸ், அவரது மனைவி ராணி கமிலா மீது முட்டைகள் வீசிய 23 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Throwing eggs at the King Charles of England


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->