மின் இணைப்புகளில் சிக்கிய விமானம் - மூன்று பேர் பலி.!
three peoples died flight accident in america
அமெரிக்கா நாட்டில் உள்ள ஓரிகான் பகுதியில் சிறிய விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. ஒற்றை இயந்திரம் கொண்ட இந்த விமானம் நேற்று மாலை 5 மணியளவில், போர்ட்லேண்ட் பகுதிக்கு தெற்கே 58 மைல்கள் தொலைவில், சேலம் பகுதிக்கு 12 மைல்கள் தென்மேற்கே இன்டிபெண்டன்ஸ் என்ற இடத்தில் மின் இணைப்பு கம்பிகள் மீது திடீரென மோதி விபத்தில் விபத்தில் நடந்துள்ளது.
இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அந்த பகுதியில் உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் செல்வதால், மின் இணைப்பை மின்சார நிறுவனம் நிறுத்த வேண்டியுள்ளது. அதன் பின்னரே, விபத்து நடந்த பகுதிக்கு சென்று தீயை அணைக்க முடியும் மற்றும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரைக்கும் தெளிவாக தெரியவில்லை. இந்த விபத்து பற்றி மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் இணைந்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
English Summary
three peoples died flight accident in america