பாகிஸ்தானில் வெள்ளப் பெருக்கில் சிக்கி 34 பேர் உயிரிழப்பு.!!
thirty four peoples died for floods in pakisthan
பாகிஸ்தானில் வெள்ளப் பெருக்கில் சிக்கி 34 பேர் உயிரிழப்பு.!!
நமது அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளிலும் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட மொத்தம் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பன்னு, டேரா, கரக் மற்றும் லக்கி மார்வார்ட் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் சுமார் 70 வீடுகள் இடிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
English Summary
thirty four peoples died for floods in pakisthan