இங்கிலாந்தில் தந்தையை பாட்டிலால் குத்திக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து தலைநகர் லண்டன் சவுத்கேட் பகுதியில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி அர்ஜன் சிங் விக்(86). இவரது மகன் டீக்கன் பால் சிங் விக் (54). இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு அர்ஜன் சிங் விக்கை அவரது மகன் டீக்கன் பால் சிங் விக் மது பாட்டிலால் குத்தி கொலைக்செய்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தந்தையை கொன்ற மகன் டீக்கன் பால் சிங் விக்கை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவரது படுக்கை அறையில் 100 ஷாம்பெயின் பாட்டில்கள், 10 அமேசான் டெலிவரி பெட்டிகளில் விஸ்கி பாட்டில்களை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முதல் நாள் விசாரணையில் கொலையை மறுத்த அவர், இரண்டாவது நாளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட டீக்கன் பால் சிங் விக்குக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the son who stabbed his father with a bottle was sentenced to life in England


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->