இந்தியர்களை கேவலப்படுத்தி சுவிட்சர்லாந்தில் வைக்கப்பட்ட போர்டு.!  - Seithipunal
Seithipunal


தங்களுடைய அறிவுத்திறனால், உலகம் முழுவதும் பரந்து விரிந்து அனைத்து துறைகளிலும் இந்தியர்கள் வெற்றி வாகை சூடி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில நடவடிக்கைகள் இந்திய தேசத்திற்கு வெளிநாடுகளில் களங்கம் விளைவிக்கும் விதமாக இருக்கின்றது. இதற்கு உதாரணமாக சுவிட்சர்லாந்தில் இருக்கும் நட்சத்திர விடுதிகள் பலவற்றில் ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த விடுதிகளில் இந்தியர்களுக்கு என்று ஒரு விதியும், பிற நாட்டினருக்கு என்று ஒரு விதியும் நியமிக்கப்பட்டு இருப்பது மிகவும் மோசமான விஷயமாகும். ஆடம்பர விடுதிகளில் தங்க வருபவர்கள் போர்வை, துண்டு மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களை அறைகளில் உபயோகித்துக் கொள்ள இலவசமாக ஓட்டல் நிறுவனம் வழங்கும்.

அவற்றை உபயோகித்து விட்டு அங்கேயே விட்டுச் செல்லலாம். அவற்றை உடன் எடுத்துச் செல்ல முடியாது அந்த அறையை விட்டு காலி செய்து வெளியே செல்லும் பொழுது அனைத்து பொருட்களும் சரியாக இருக்கிறதா என்று ஊழியர்கள் சரிபார்த்த பின்னரே வெளியேற முடியும். அதுபோல வந்து தங்கும் விருந்தினர்களின் உடைமைகளும் பரிசோதிக்கப்படும்.

இப்படி பரிசோதனை செய்யும்போது இந்தியர்களில் பெரும்பாலானோர், அங்கே கைவரிசையை காட்டி பல பொருட்களை தன்னுடையதாக்கி விடுதிகளில் சிக்கி இருக்கின்றனர். இதனால் ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் பெரும்பாலான விடுதிகள் இந்தியர்கள் கவனத்திற்கு என்று செய்யக்கூடாத விஷயங்களை தனி அறிவிப்பு பலகையை வைத்து இந்தியர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கின்றது. கொஞ்சம் திருந்துங்க பா. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

swizz hotels insults indian


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->